காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி ஆத்மபோதேந்த்ராள்
ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்றஸ்வாமிநாதனும்,திண்டிவனம் அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள்!
பெரியவா விழுப்புரம் வரும் போதெல்லாம், விழுப்புரம் எல்லையில் உள்ள, பாப்பான்குளம் பாபுராவ் சத்ரத்தில்தான் தங்குவார். லக்ஷ்மிநாராயணனின் அப்பாதான், பெரியவாளுக்கு, விழுப்புரம் எல்லையிலேயே பூர்ணகும்ப மர்யாதை செய்து பாபுராவ் சத்ரத்திற்கு அழைத்துச் செல்வார். யானை, குதிரை, பஶுக்கள் எல்லாவற்றையும் கட்டி வைக்க, அங்கே பஹு வஸதி உண்டு.
ஒருநாள் லக்ஷ்மிநாராயணனையும் மற்றொரு பாரிஷதரையும் பெரியவா அழைத்தார்…..
“இங்கேர்ந்து…. ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்ல….வடவாம்பலம்-ன்னு ஒரு ஊர் இருக்கு! அங்க…. போயி….ஸுப்ரஹ்மண்ய ரெட்டியார்-ன்னு ஒத்தர் இருப்பார்….. அவரை… நா…. கூப்ட்டேன்னு சொல்லி…. கூட்டிண்டு வாங்கோ!…”
ரெண்டுபேரும் போய் ரெட்டியாரை ஸந்தித்து பெரியவா அழைப்பதாகச் சொன்னார்கள். அவர் நல்ல வஸதி படைத்தவர்.
“பெரியவங்க….. என்ன காரணத்துக்கு கூப்ட்டாருன்னு தெரியலியே…..”
உடனே பெரியவா முன் ஆஜரானார்!….
“இங்க இருக்கற தாஸில்தாரை அழைச்சிண்டு வாங்கோ……”
அப்போதெல்லாம் தாஸில்தார் என்பவர் கிட்டத்தட்ட ஒரு குட்டி கலெக்டர் மாதிரி! அந்த தாஸில்தார் கும்பகோணத்தை சேர்ந்த ப்ராஹ்மணர்!
பெரியவா அவரிடம் ஏதோ ஒரு இடத்தை பற்றி குறிப்பாக கேட்டார்……
“இந்த ஊர்ல என்ன விஸேஷம்-ன்னு….. ஒங்கிட்ட field-map வெச்சிண்டிருப்பியே! அதப்பாத்து சொல்லு பாப்போம்..”
அவர் முழிக்கவும், சிரித்துக் கொண்டே…. தானே அந்த ஊரின் விஸேஷத்தை சொல்ல ஆரம்பித்தார்…..
“200 வர்ஷத்துக்கு முன்னால….. இந்த பெண்ணையாறு வந்து….. இங்க… வடவாம்பலம் பக்கத்லதான் ஒடிண்டிருந்திருக்கு! நாளாவட்டத்ல… ஒதுங்கி ஒதுங்கி… இப்போ…. ரொம்ப தூ..ரம் தள்ளிப் போய்டுத்து! அதோட….. வடவாம்பலத்லதான்… ஆத்மபோதேந்த்ராள்..ன்னு நம்ம காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி… அவரோட அதிஷ்டானம் இருக்கு! ராமநாம ஸித்தாந்தம் பண்ணின ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ராளோட [கோவகுருதான் இவர்!…. அவரோடது ஒரு பீடம் கூட இருந்திருக்கு! லிங்கப்ரதிஷ்டை பண்ணி, அதிஷ்டானம் கட்டியிருந்தா! அதெல்லாம்….. வெள்ளம் அடிச்சிண்டு போய்டுத்து!.. தை பொறந்து….. அஞ்சு தேதி வரைக்கும்….. பெண்ணையாத்துல கங்கை வர்றதா…. ஐதீகம்! பெரிய திருவிழாவா ஆத்தங்கரைல கொண்டாடுவா!….”
“ஆனா…. இப்போ…. அந்த மாதிரி எந்த அதிஷ்டானமும் இருக்கறதா…. தெரியலியே பெரியவா…”
தாஸில்தார் சொன்னதும், பெரியவா பதிலேதும் சொல்லாமல் அவர்களுக்கு ப்ரஸாதம் குடுத்து அனுப்பிவிட்டார்.
திடீரென்று ஒருநாள்…. இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும்! நகரங்களில் கூட மின்வஸதி இல்லாத காலம் என்பதால், க்ராமத்தை பற்றிக் கேட்கவும் வேண்டுமா?….
பெரியவாளுடைய ‘சொடக்கில்‘ லக்ஷ்மிநாராயணனும், மற்றொரு பாரிஷதரும் முழித்துக் கொண்டனர்….
“எனக்கு இப்போவே…. வடவாம்பலத்துக்கு போகணும்! டார்ச் லைட்டை எடுத்துண்டு எங்கூட ரெண்டுபேரும் வாங்கோ!…”
அந்த அகாலத்தில், காலகாலனான பெரியவாளுடன் வடவாம்பலம் போனார்கள்! ராத்ரி 2 மணியளவில் வடவாம்பலத்தை அடைந்தார்கள். பெரியவா அந்த இருட்டில்…[நமக்குத்தான் இருட்டு!!] ஸரியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து…. அங்கு அமர்ந்து ஜபம் பண்ண ஆரம்பித்தார். விடிந்து நான்கு மணிக்கு…. நயனங்களை மெல்லத் திறந்தார்! எதுவுமே பேசவில்லை. மறுபடி நடந்து, ஸூர்யோதயம் ஆகும் முன்னால், முகாமுக்கு வந்துவிட்டார்!
Continue reading→