Workshop & Concert

Sri T.H.Vikku Vinayakram Mama – The Grammy Award Winner and Legendary Ghatam Maestro presents “Panchaakshara” – A Rhythmic Representation Of Periyava Slokas In Aid of Sri MahaPeriyava Manimandapam, NJ USA On Saturday , October 22nd 2016.

Attend a Scintillating and most empowering workshop with Sri Vikku Vinayakram in New Jersey. Limited seats, secure your spots and learn a lot.

NOTE: WORKSHOP BY REGISTRATION ONLY !!!
ALL ARE WELCOME FOR THE CONCERT

Register With This Link: http://events.sulekha.com/workshop-with-shri-vikku-vinayakram_event-in_hightstown-nj_309788

ராமநாமத்தின் விலை!

தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…’ என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.

மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்…’ என்றார்.
அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ‘ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்…’ என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே…’ என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ‘ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்…’ என்றான்.

Continue reading

சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”

(கிராப்புத்தலை குடுமியான ஸ்வாரஸ்ய கதை)

(சற்று நீண்ட பதிவு-ஆனால் அதி ஸ்வாரஸ்யம்)

சொன்னவர்;ஸ்ரீமதி மைதலி,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

என் தகப்பனார் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சாஸ்திரிகள்
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில், ஹிந்தி
விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஹிந்தி மொழிப் புலமை வயிற்றுப்பாட்டுக்கு
உதவிற்று. ஆனால் சிறு வயதில்,அவர் வேத
பாடசாலையில் அத்யயனம் செய்திருக்கிறார்.
சம்ஸ்கிருதம் பயின்று, தேர்வுகளில் நிறைய
மதிப்பெண் பெற்று தங்கமெடல் வாங்கியிருக்கிறார்.

சம்ஸ்கிருதம் படித்தவர்களிடம் மகாப்பெரியவாளுக்கு
அலாதிப் பிரியம் உண்டு. தரிசன காலங்களில்
சிறு சலுகைகளும் உண்டு.Continue reading

ஹரியும் ஹரனும் ஒன்று தான்

“ஹரியும் ஹரனும் ஒன்று தான்.
ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது”.

(“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர்
ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத்
திருவாராதனம் செய்வது வழக்கம்.
உனக்குத் தெரியுமோ?…..”)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒரு வைஷ்ணவருக்குப் பரமேஸ்வரனிடம்
எல்லையில்லாத பக்தி.திருநீறு இட்டுக் கொள்ள
வேண்டும்.என்று ஆசை.ருத்ராக்ஷ மாலை
அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவா!

அவ்வப்போது பெரியவா தரிசனத்துக்கு
வருவார் அவர்.

ஒரு தடவை வந்தபோது பெரியவாளிடம்
பிரார்த்தித்துக் கொண்டார்.

“ஒரு மகா பிரதோஷத்தன்னிக்கு நான் பஸ்ம
தாரணம் பண்ணிக்கணும். நிறைய ருத்ராக்ஷ மாலை
போட்டுக்கணும்.ஸ்ரீருத்ர- சமகம் சொல்லி
ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யணும்!….
நானோ வைஷ்ணவன் .நான் இப்படியெல்லாம்
செய்யலாமா என்று பெரியவாதான் சொல்லணும்.
Continue reading

“ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி

“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ …..வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ……இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி …….வந்திருக்கேன்” -பெரியவா

(நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி)

பல முறை போஸ்ட் செய்யப்பட்ட அலுக்காத சம்பவம்

கட்டுரை ஆசிரியர்-ரா.கணபதி
கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.

.
நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

Continue reading

உனக்கு, எப்படி இந்த பாட்டு தெரியும்?

அன்று.. தேனம்பாக்கத்தில் வெகு சிலபேர் மட்டுமே இருந்தனர். பெரியவா… கிணற்றின் பக்கத்திலிருந்து தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.சின்ன குயில்களின் கானமும், காக்கைகளின் எசப்பாட்டும் தவிர வேறு சத்தமில்லா நிசப்தம். “காமாட்சி… காமகோடி பீடவாஹினி..”- ஒரு பெண்மணி, மிக மதுரமாக பாடிக்கொண்டிருந்தார். அவர் அருகில், வேறொரு பெண், இடுப்பில் 3 வயது குழந்தையை வைத்தபடி பெரியவாளையே தரிசனம் செய்துகொண்டிருந்தார்.
“கமலேச சோதரி கமலாக்ஷி நாராயணி….” என்று பாடியவர், அடுத்த வரி மறந்து சற்று தடுமாறினார்…உடனே, “நாத பிந்து கலா ஸ்வரூபிணி..காத்யாயனி..”என்று, மழலையின் குரல் எடுத்துக்கொடுத்தது.. கண்ணில் நீர் பொங்க, அந்தப்பெண்மணி, கைகளாலேயே அந்த குழந்தையின் கன்னத்தை வருடி, முத்தமிட்டு, பாடலை பாடி முடித்தார்.
“யாரோட குழந்தை அது…”- பெரியவா உள்ளிருந்தபடியே கேட்டார்.
“என்னோட பையன் தான்.. பெரிவா…” – கையில் குழந்தையை வைத்திருந்தவர், சற்று தூக்கி காண்பித்தார்..

Continue reading