மங்களாரம்பம் -பெரிய இடத்துப் பிள்ளை
பாட்டனார் பெருமை
ஒரு குழந்தையிடம் நாம் மரியாதை காட்டும்படி இருக்குமானால், “அது யாரகத்துக் குழந்தை தெரியுமா? இன்னர் அதற்கு அப்பா, இன்னார் தாத்தா “என்று’ப்ரவரம்’ சொல்வார்கள். இப்படிப் பிள்ளையாருக்கு ப்ரவரம் சொல்லி ஒரு ச்லோகம் உண்டு.
மாதமஹ மஹாசைலம்
மஹஸ்தத் அபிதாமஹம்மி
காரணம் ஜகதாம் வந்தே
கண்டாதுபரி வாரணம்மிமி
ப்ரவத்தில் கொள்ளுத்தாத்தா பேரும் சொல்லணும். இங்கே அப்படி இல்லை.
தாத்தாவோடு நின்றுவிடுகிறது.
”விஷ்ணு ஸஹஸ்ர நாமம்” பூர்வ பாகத்தில் வ்யாஸரைப் பற்றி வரும் ஒரு ச்லோகத்தில் தான் அவருடைய கொள்ளுத் தாத்தாவான வஸிஷ்டரில் ஆரம்பித்து, பிள்ளை சுகாரசார்யாள்வரையில் வரிசையாய் எல்லார் பேரும் சொல்லியிருக்கிறது. சுகர் ப்ரம்மசாரி. இல்லாவிட்டால் அவருடைய பிள்ளை, பேரன் என்றெல்லாமும் சொல்லிக்கொண்டே போயிருக்குமோ என்னவோ? சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார். எல்லாவற்றிற்கும் முதல், குரு வணக்கம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வரர் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்கியம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ருப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே? இதனாலும் வ்யாஸர் பேச்சு வந்ததில் ஸந்தோஷந்தான்.Continue reading