பெரியவா கடாக்‌ஷம்.

பெரியவா சரணம்.

பாருங்களேன்… பரந்தாமன் தரிசனத்தை! மனதினில் எல்லையில்லாத ஆனந்தத்தை நொறைக்கும் இந்த அற்புத தரிசனத்தை இன்றைய தினம் காணும் பாக்கியத்தை அடியேன் பெற உதவிய Kumaran Kkls க்கு ஆத்மார்த்தமான நன்றி கூறி யாம் பெற்ற இன்பத்தை உங்கள் அனைவரோடும் பகிர்வதிலும் கூட மனம் நிறைகிறது.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆதியன் தரிசனம் ஆனந்தமே
ஜோதியில் நாயகன் தரிசனமே
சோமனின் அருள்தனை தந்திடுதே

ஆனந்தம்….

இருள்தனை கலைந்திடும் அருளொளியே
இகபர சுகமதில் எழில்தருமே
மனமதில் நிறைத்திடும் பக்தியிலே
மநமதில் சரண்புக வேண்டிடுதே

ஆனந்தம்….

மறைதரும் ஞானமும் கூடிடுதே
மருந்தென குருவருள் காத்திடுதே
குவலயம் அறமதில் வளர்ந்திடுதே
குலகுரு சங்கரன் அருள்தனிலே

ஆனந்தம்….

குரு கடாக்‌ஷத்தில் அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்திக்கின்றேன்.

சங்கர கோஷத்தோடு இந்த தரிசனத்தை அனைவரும் காண விழையுங்கள்.

குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்‌ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்

“1387 ரூபாய் அனுப்பு “

av_9_right_hand_blessing_vilva_on_head
அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.

திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.

உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.

“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.

Continue reading

சங்கீதமும் சமையலும்

(எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்
பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !)
(வேதபுரி)
சொன்னவர்;.வேதபுரி
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்….
(மறுபதிவு)

Continue reading

81st birthday

Live Telecast
81st Birthday of
Sri Sri Jeyendra Saraswathi Swamigal
69th Acharya of Kanchi Kamakoti Peetam