அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி


DSC_0348 Aஅலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது; சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது. மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: “நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு. அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள்,பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.” 
உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.

‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்தசதாசிவ சங்கர’

உபதேசம் பெற்ற அம்மங்கையர்கரசி, மனமகிழ்ந்து, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?” என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.

ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான் !!!

பெரியவா சொன்னது

பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான அநுக்ரஹ வழி

பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு! எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. ஏக்கம் என்று கூட சொல்லலாம்.அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது.பாவம்! “சரஸ்வதி”யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும்? பெரியவாளிடம் ரொம்ப மனஸ் உருகி வேண்டினார்.

“பெரியவா…எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத்தேத்திக்கணும்….ஆனா, என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி”Continue reading

சனி பிரதோஷம்

மஹா சனி பிரதோஷம் 10.10.2015 (4.30pm to 7.30pm)

வரும் சனிக்கழமை (10.10.2015) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்
எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை
(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.
காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்
(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,
முந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்
போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு Continue reading

Letter of Appreciation

Letter of Appreciation for the selfless service Rendered – From wordpress.com

Sage of Kanchi

WORLD’S LARGEST MAHAPERIYAVA TEMPLE

PRADOSHAM EVENT VIDEO FROM ADISHTANAM – VIGNESH STUDIO

on ( 4 )

Thanks to Vignesh Studio…..

As usual, HD quality video – amazing to watch. Heartfelt thanks to Vignesh studio on behalf of all devotees all over the world! Without your selfless service, we couldh’t have watched this monthly from wherever we are.

After the alankaram is over, it looks like Periyava is sitting there for real!

One question – on the face of the brindavan, there is a swami in the standing posture – is that Mahavishnu?

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  1. Can I have the full address, tel number and name of contact person in Vignesh studios please…
    Jaya Jaya Shankara Hara Hara Shankara

  2. Sir, if I am not wrong it is Sri Krishna! Hara Hara Shankara Jaya Jaya Shankara!

  3. it;s a heart touching kaingaryam by Sri Kumar of vignesh photo studio, my humble request not to use plastic container/ cans at brindavanam, if i am wrong pl pardon me. it’s only a suggestion, and during abishekam the holy water/milk are touching the feet of the priest & assistants who stand nearer to periyava, May be wooden platform can cover those areas by not touching the feet

  4. Theertham periavah kaiyala kidaichha santhosamaha irrukkum. Annathana mandapathil table chair pottal elderly people ku siramam illamal irukkum. It is only a request.i apologise if it against the norms of the mutt . Kodi namaskarams to preiavah .jayajaya sankara hara hara sankara.